முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 120. கம்பலை கண்ட நாடு!
புறநானூறு - 120. கம்பலை கண்ட நாடு!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப், பூழி மயங்கப் பல உழுது, வித்திப் பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக் களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, |
5 |
மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக், கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து, கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, வாலிதின் விளைந்த புது வரகு அரியத் தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக் |
10 |
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக, நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து. நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப், பெருந் தோள் தாலம் பூசல் மேவர, |
15 |
வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ: இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை ஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர் பாடி யானாப் பண்பிற் பகைவர் ஓடுகழல் கம்பலை கண்ட |
20 |
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 118 | 119 | 120 | 121 | 122 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 120. கம்பலை கண்ட நாடு!, வரகு, இலக்கியங்கள், கம்பலை, கண்ட, தினை, புறநானூறு, நாடு, நிலம், நிலத்தில், தாலம், வெப்புள், எட்டுத்தொகை, சங்க, விளைந்த, விரிந்து