முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 105. தேனாறும் கானாறும்!
புறநானூறு - 105. தேனாறும் கானாறும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: விறலியாற்றுப்படை.
சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி! தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப் பெய்யினும், பெய்யா தாயினும், அருவி கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட, |
5 |
மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும் நீரினும் இனிய சாயல் பாரி வேள்பால் பாடினை செலினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 103 | 104 | 105 | 106 | 107 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 105. தேனாறும் கானாறும்!, இலக்கியங்கள், தேனாறும், புறநானூறு, கானாறும், அருவி, இனிய, குவளை, சங்க, எட்டுத்தொகை, பாரி