முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 104. யானையும் முதலையும்!
புறநானூறு - 104. யானையும் முதலையும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை: அரசவாகை.
போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை; ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும் தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ நுண்பல் கருமம் நினையாது, |
5 |
இளையன் என்று இகழின், பெறல் அரிது, ஆடே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 102 | 103 | 104 | 105 | 106 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 104. யானையும் முதலையும்!, இலக்கியங்கள், யானையும், புறநானூறு, முதலையும், முதலை, எட்டுத்தொகை, சங்க