முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 103. புரத்தல் வல்லன்!
புறநானூறு - 103. புரத்தல் வல்லன்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்.
துறை: விறலியாற்றுப்படை.
ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத் தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக், கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்? எனச் சுரன்முதல் இருந்த சில்வளை விறலி! செல்வை யாயின், சேணோன் அல்லன்; |
5 |
முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும் பகைப்புலத் தோனே, பல் வேல் அஞ்சி; பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப, |
10 |
வறத்தற் காலை யாயினும், புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 103. புரத்தல் வல்லன்!, இலக்கியங்கள், வல்லன், புரத்தல், அவன், மண்டை, அஞ்சி, புறநானூறு, வாழ்க, உணவு, விறலி, யார், பதலை, எட்டுத்தொகை, சங்க