முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 10. குற்றமும் தண்டனையும்!
புறநானூறு - 10. குற்றமும் தண்டனையும்!
பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.
வழிபடு வோரை வல்லறி தீயே! பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே; நீமெய் கண்ட தீமை காணின், ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி; வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், |
5 |
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே; அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப! |
10 |
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ், நெய்தருங் கானல் நெடியோய்! எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 10. குற்றமும் தண்டனையும்!, இலக்கியங்கள், குற்றமும், மகளிர், உன்னை, தண்டனையும், புறநானூறு, நெடியோய், நெய்தலங்கானல், மள்ளர், கானல், எட்டுத்தொகை, சங்க, நாடி, மலைத்தல்