முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி
வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : அருவி ஆம்பல்
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே; பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ, நட்டோ ர்க்கு அல்லது கண் அஞ்சலையே, வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே; |
5 |
நிலம் திறம் பெயரும் காலைஆயினும், கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே; சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி, கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்து, குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி, |
10 |
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒளி வாட் செரு மிகு தானை வெல் போரோயே; ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி, 'நீ கண்டனையேம்' என்றனர்: நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்: அதனால், |
15 |
செல்வக் கோவே! சேரலர் மருக! கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி நனந் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின், அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் ஆயிர வெள்ள ஊழி |
20 |
வாழி, ஆத! வாழிய, பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அறியலையே, அல்லது, ஆம்பல், அருவி, வண்ணம்