முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக்
கடுமையும் உடன் கூறுதல்
பதிற்றுப்பத்து - 51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வடு அடு நுண் அயிர்
துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர, விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் கடல் சேர் கானற் குட புலம் முன்னி, கூவல் துழந்த தடந் தாள் நாரை குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும், |
5 |
வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின் அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும், தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து, இயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள் |
10 |
வெறி உறு நுடக்கம் போலத் தோன்றி, பெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணி அர வழங்கும், பெருந் தெய்வத்து, வளை ஞரலும் பனிப் பௌவத்து, குண குட கடலோடு ஆயிடை மணந்த |
15 |
பந்தர் அந்தரம் வேய்ந்து, வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் நனை உறு நறவின் நாடுடன் கமழ, சுடர் நுதல், மட நோக்கின், வாள் நகை, இலங்கு எயிற்று, |
20 |
அமிழ்து பொதி துவர் வாய், அசை நடை விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின், 'வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என, உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே? மழை தவழும் பெருங் குன்றத்து, |
25 |
செயிருடைய அரவு எறிந்து, கடுஞ் சினத்த மிடல் தபுக்கும் பெருஞ் சினப் புயல் ஏறு அனையை; தாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்; |
30 |
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து, நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப, தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை கை வல் இளையர் கை அலை அழுங்க, மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம் |
35 |
வலை விரித்தன்ன நோக்கலை; கடியையால், நெடுந்தகை செருவத்தானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கடல், வயின், நின், இரும், அயிர், பெயர், நுண், வண்ணமும்