முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 46. கொடைச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 46. கொடைச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கரை வாய்ப் பருதி
இழையர், குழையர், நறுந் தண் மாலையர், சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை, திறல் விடு திருமணி இலங்கு மார்பின் வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர் தொடை படு பேரியாழ் பாலை பண்ணி, |
5 |
பணியா மரபின் உழிஞை பாட, இனிது புறந்தந்து, அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்- சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி ஊர் பாட்டு எண் இல் பைந் தலை துமிய, பல் செருக் கடந்த கொல் களிற்று யானை, |
10 |
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய வெல் புகழ்க் குட்டுவன் கண்டோ ர்- செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பருதி, வாய்ப், வண்ணம், பாட்டு