முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நோய் தபு நோன் தொடை
நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ, வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க, பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற அரிய என்னாது ஓம்பாது வீசி, கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும், |
5 |
'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து, ஆடு நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர்- காணிலியரோ-நிற் புகழ்ந்த யாக்கை முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை: நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை |
10 |
சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து, புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு, அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு, நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து, |
15 |
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி, ஒழுகை உய்த்தோய்! கொழு இல் பைந் துணி வைத்தலை மறந்த துய்த் தலைக் கூகை கவலை கவற்றும் குரால்அம் பறந்தலை, முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி, |
20 |
துளங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த மன்னர் மறைத்த தாழி, வன்னி மன்றத்து விளங்கிய காடே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வெல், கொடி, தொடை, நோன், நோய், வண்ணம்