முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 33. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 33. வென்றிச் சிறப்பு
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வரம்பு இல் வெள்ளம்
இறும்பூதால் பெரிதே, கொடித் தேர் அண்ணல்!- வடி மணி அணைத்த பணைமருள் நோன் தாள், கடி மரத்தான், களிறு அணைத்து; நெடு நீர துறை கலங்க, மூழ்த்து இறுத்த வியன் தானையொடு |
5 |
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம், வாள் மதிலாக, வேல் மிளை உயர்த்து, வில் விசை உமிழ்ந்த வைம் முள் அம்பின், செவ் வாய் எஃகம் வளைஇய அகழின், கார் இடி உருமின் உரறு முரசின், |
10 |
கால் வழங்கு ஆர் எயில் கருதின்- போர் எதிர் வேந்தர் ஒரூஉப, நின்னே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வெள்ளம், வரம்பு, வண்ணம், துறை