முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை
வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : அடு நெய் ஆவுதி
சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம், என்று ஐந்துடன் போற்றி அவை துணையாக, எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை, காலை அன்ன சீர் சால் வாய்மொழி, உரு கெழு மரபின் கடவுட் பேணியர், |
5 |
கொண்ட தீயின் சுடர் எழுதோறும் விரும்பு மெய் பரந்த பெரு பெயர் ஆவுதி; வருநர் வரையார் வார வேண்டி, விருந்து கண்மாறாது உணீஇய, பாசவர் ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங் குறை |
10 |
குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப, கடல் ஒலி கொண்டு, செழு நகர் வரைப்பின் நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி; இரண்டுடன் கமழும் நாற்றமொடு, வானத்து நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி, |
15 |
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின், மாரிஅம் கள்ளின், போர் வல் யானை, போர்ப்பு உறு முரசம் கறங்க, ஆர்ப்புச் சிறந்து, நன் கலம் தரூஉம் மண் படு மார்ப! முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் |
20 |
புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி, கல் உயர் கடத்திடைக் கதிர் மணி பெறூஉம், மிதி அல் செருப்பின் பூழியர் கோவே! குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை! பல் பயம் தழீஇய, பயம் கெழு நெடுங் கோட்டு, |
25 |
நீர் அறல் மருங்கு வழிப்படா, பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா, சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய, நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந! யாண்டு பிழைப்பு அறியாது, பய மழை சுரந்து |
30 |
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக! மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு, கார் மலர் கமழும் தாழ் இருங் கூந்தல், ஒரீஇயின போல இரவு மலர் நின்று திருமுகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண், |
35 |
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து வேய் உறழ் பணைத் தோள், இவளோடு ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெயர், ஆவுதி, உயர், பயம், நீர், கமழும், மலர், பெரு, நெய், கெழு, வண்ணம், கொண்டு