நற்றிணை - 98. குறிஞ்சி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி நூழை நுழையும் பொழுதில், தாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, |
5 |
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன் கல் அளைப் பள்ளி வதியும் நாடன்! எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த் துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி, இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- |
10 |
வைகலும் பொருந்தல் ஒல்லாக் கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே! |
முள்ளம் பன்றியின் முட்போன்ற பருத்த மயிரையுடைய பிடரும் சிறிய கண்ணும் வயலிற் சென்றுண்ணும் விருப்பமுமுடைய பன்றி; உயர்ந்த மலையிடத்துள்ள இடமகன்ற தினைக் கொல்லையிலே சென்று மேயும் பொருட்டுப் பெரிய இயந்திரமமைந்த புழைவழியிலே சென்று புகும்பொழுது; தாழாது விரைந்து நல்ல பக்கத்திலிருந்து பல்லியடித்தலும் அதனை அறிந்து ஆங்குச் சென்றால் ஊறு நிகழும் என்று அஞ்சி; மெல்ல மெல்லப் பின்னே மீண்டுவந்து தன் கல்முழையிலுள்ள பள்ளியிடத்தே தங்காநிற்கும்; மலைநாடனே ! எந்தையாலே பாதுகாக்கப்படுகின்ற காவலையுடைய அகன்ற மாளிகையிடத்துத் துஞ்சாமற் காக்குங் காவலர்தாம் சிறிது அயர்ந்திருக்கும் பருவமறிந்து; நீ இரவின்கண் வந்து முயங்கிச் செல்லும் அதனினும் காட்டில் நாள்தோறும் நீ வரும் நெறியின் ஏதத்தைக் கருதுவதனாலே துயிலப் பெறாது என்கண்ணும் கொடிதாயிராநின்றது; அன்றியும் நின்பாற் சென்று வாராத என்பால் அன்பற்ற என்னெஞ்சமும் கொடிதாயிராநின்றது காண் !;
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது. - உக்கிரப் பெருவழுதி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 96 | 97 | 98 | 99 | 100 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சென்று, வந்து, கொடிதாயிராநின்றது, அதனினும், தாழாது, பன்றி