நற்றிணை - 91. நெய்தல்
நீ உணர்ந்தனையே- தோழி!- வீ உகப் புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், |
5 |
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை, தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும் கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய, புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் |
10 |
கடு மாப் பூண்ட நெடுந் தேர் நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே? |
தோழீ ! மலர்கள் உதிரும்படி புன்னை பூத்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய; ஓசை முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலின் கண்ணே துழாவித் தன் பெடையோடு ஒருசேரச் சென்று இரையைத் தேடுகின்ற நீண்ட காலையுடைய நாரை; மெல்லிய சிவந்த சிறிய கட்கடையையுடைய சிறிய மீன்களைப் பிடித்து, மேலோங்கிய கிளையின்மேலுள்ள கூட்டின்கணிருந்து தாயைக் கூவியழைக்கின்ற தன் பிள்ளையின் வாயிற்படக் கொடுக்கின்ற; கடற்கரைச் சோலையையும் (அழகிய) கொல்லையையும் கெடாத வளவிய மிக்க உணவையும் பெரிய நல்ல கொடையையுமுடைய நமது சிறுகுடி யெங்கும் பொலிவு பெற; புள் ஒலித்தாற்போன்ற சுழற்சியையுடைய பெரிய ஒலியையுடைய மணிகள் பிணைத்த மாலையணிந்த கடிதாகச் செல்லுங் குதிரைபூட்டிய நெடிய தேரின்மேல்; நீண்ட கடற்கரைத் தலைவனாகிய நம் காதலன் பகற் பொழுதிலே பலருங் காண இங்கு வருவதனை; நீ உணர்ந்தனையோ ?; இங்ஙனம் வெளிப்படையின் வருதலானே வரைவு கருதி வந்தனன் போலும்;
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது. - பிசிராந்தையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிறு, நீண்ட, சிறிய, பெரிய, வரைவு, புள், தோழி, உயர், பெடையோடு, நாரை, புன்னை