நற்றிணை - 81. முல்லை

இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று ஆதி போகிய அசைவு இல் நோன் தாள், மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப, பூண்கதில்- பாக!- நின் தேரே: பூண் தாழ் |
5 |
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப அழுதனள் உறையும் அம் மா அரிவை விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன் நகை காண்கம்!- உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே. |
10 |
பாகனே வலிய வாளையுடைய நம்மரசன் மிக்க பகையைத் தணித்து விட்டனன் இங்கு இனிக் காரியமில்லை; (அகன்ற) பெரிய நிலம் குழியும்படி தங்காலாலே கொட்டி நடந்து விரைந்து நேராக ஓடுகின்ற களைப்பில்லாத வலிய கால்களையுடைய அரசரால் நன்கு மதிக்கப்படுகின்ற மாட்சிமைப்பட்ட நடைத் தொழிலையுடைய குதிரையை; கொய்யு மயிரையுடைய பிடரியிற் கட்டிய மணிகள் ஒலிப்ப நின் தேரிலே பூட்டிச் செலுத்துவாயாக !; பூண்கள் தாழ்ந்த மார்பிலுள்ள அழகிய கொங்கை முகட்டிலே கண்ணீர் தெறித்து விழும்படியாக அழதனளாகியுறையும்; அழகிய மாமை நிறத்தை யுடைய காதலி எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய் அட்டிற் சாலை புகுந்து விருந்துணவை வருந்தி யமைத்துக் களைப்படைந்துடைய மகிழ்ச்சியோடமைந்த இனிய நகையைக் கண்டு மகிழ்வோமாக !;
வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது. - அகம்பல்மால் ஆதனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 79 | 80 | 81 | 82 | 83 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அழகிய, வலிய, விருந்து, நின், நிலம்