நற்றிணை - 8. குறிஞ்சி
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண், பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல், திரு மணி புரையும் மேனி மடவோள் யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்! துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் |
5 |
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள் கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் திண் தேர்ப் பொறையன் தொண்டி- தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! |
10 |
மிக்க துன்பமுழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்களையும்; பலவாகிய பூக்களுடனே மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடையை அசையும்படி உடுத்த அல்குலையும்; அழகிய நீலமணியொத்த மேனியையுமுடைய இவ் விளமகள்; யாவர் புதல்வியோ?; அசையாத உள்ளத்தையுடைய எம்மையே துயரஞ் செய்தனள்!; இத்திறம் வல்லவளைப்பெற்று எனக்குதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்வானாக!; இவளை ஈன்ற தாயும்; அகன்ற வயலின்கண்ணே மள்ளரால் அரியப்பட்டும் அரிச்சூட்டை எடுப்போராற் கொண்டுவரப்பட்டும் தண்ணிய சேறு பரந்து; அழகினையும் வலிய தண்டினையுமுடைய கண்போன்ற நெய்தல் நெற்போரின்கண்ணே மலரும்; திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ற சிறப்பினைப் பெறுவாளாக!;
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இவள், ஈன்ற, தொண்டி, சேறு, தந்தை, நெய்தல்