நற்றிணை - 75. குறிஞ்சி
நயன் இன்மையின், பயன் இது என்னாது, பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை, பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது தகாஅது- வாழியோ, குறுமகள்!- நகாஅது உரைமதி; உடையும் என் உள்ளம்- சாரல் |
5 |
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போல, சேயரி பரந்த மா இதழ் மழைக் கண் உறாஅ நோக்கம் உற்ற என் பைதல் நெஞ்சம் உய்யுமாறே. |
10 |
இளமகளே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக !; உன்னிடத்திற் சிறிதும் நன்மை யில்லாமையால் இதுதான் பயன் என்று கருதாமல்; பொலிவு பெற்ற புள்ளிகள் அமைந்த அழல் போன்ற நஞ்சை உமிழ்கின்ற அகன்ற படத்தையுடைய பாம்பு உயிர்களைக் கொல்லும் பொருட்டுக் கடித்து வருத்தினாற்போலும்; ஈங்கு இது தகாஅது இங்கு நகைத்துரைப்பதாகிய இது தகுதியுடையதொன்றன்று சாரல் கொடுவில் கானவன் கோட்டு மா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சே அரி பரந்த ஆயிழை மழைக் கண் மலைச் சாரலின்கண்ணே வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கோட்டினையுடைய பன்றியை எய்து கொன்று, அதன் பசிய தசையிற் பாய்ச்சியதனாலே சிவந்த அம்பைப் போலச் செவ்வரி பரந்த ஆராய்ந்த இழையை அணிந்த தலைவியின் குளிர்ச்சியுற்ற கண்களினுடைய; பொருந்தாப் பார்வையுற்ற எனது வருந்திய நெஞ்சம்; உய்யும் வண்ணம் இங்ஙனம் நகை செய்யாது உரைப்பாயாக !; நகைத்துக் கூறின் என் உள்ளம் கலங்காநிற்கும்;
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது. - மாமூலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பரந்த, பகழி, பச்சூன், பெய்த, மழைக், போலச், நெஞ்சம், தொலைச்சிப், கானவன், பாம்பு, அழல், ஈங்கு, தகாஅது, சாரல், உள்ளம், பயன்