நற்றிணை - 7. பாலை
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப, கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக் கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப, தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் |
5 |
இன்னே பெய்ய மின்னுமால்- தோழி! வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும் சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே. |
தோழீ ! மூங்கிலின் வெளிய நெல்லைத் தின்ற வரி பொருந்திய நெற்றியையுடைய யானை; தண்ணிதாகிய நறுமணங் கமழு மலைப்பக்கத்திலே துஞ்சா நிற்கும்; சிறிய இலையுடைய சந்தன மரத்தினையுடைய வாடிய பெரிய காட்டினகத்து; அச்சத்தையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையவும்; பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிப்பவும்; கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவருகின்ற மிக்க விசையினையுடைய கானியாற்றின் கண்ணே; பற்றுக் கோடாகிய மூங்கிலும் முழுகுமாறு பெருகிய வெள்ளத்தின் அலைகாட்டிற் சென்று மோதா நிற்கவும்; ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து; முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னா நிற்கும்; இக் காலத்தை நோக்கினவுடன் அவர் இன்னே வந்து நின்னை வரைந்து கொள்வராதலின், நீ வருந்தாதே கொள் !
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது. - நல்வெள்ளியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிற்கும், பெரிய, யானை, தோழி, ஆர்ப்ப, இன்னே, நீர்