நற்றிணை - 40. மருதம்
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட, குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர், பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார், திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப, வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் |
5 |
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச, ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை ஈர்- இமை பொருந்த, நள்ளென் கங்குல், கள்வன் போல, |
10 |
அகன் துறை ஊரனும் வந்தனன்- சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே. |
காவலையுடைய மாளிகையிடத்து நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி ஒலியா நிற்ப ஒலிக்கின்ற தெங்கங் கீற்றான் மிடைந்து புனைந்த மணல் பரப்பிய பந்தரின்கண்ணே; முன்பு பரத்தையிற் சென்ற வழி¢ப் பெரிய பாணர் தலைவனைச் சூழ்ந்து காவலை மேற்கொண்டாற் போலத் திருந்திய கலனணிந்த மகளிர் இப்பொழுது நன்னிமித்தமாக நிற்ப; நறுமணமிக்க விரிப்பு விரித்த மெல்லிய அணையின்மீது செவிலியுடனே ஈன்ற அணுமை விளங்கிய புதல்வன் துயிலா நிற்ப; வெண்கடுகை யப்பிய எண்ணெய் தேய்த்து ஆடும் நீராட்டினால் ஈரிய அணியையுடைய குளிர்ந்த நெய்பூசிய மிக்க மென்மையாகிய உடம்பினையுடைய அழகு விளங்கிய மனைவிதான்; தன் ஈரிமையும் ஒன்றோடொன்று பொருந்த வுறங்கா நிற்ப; அகன்ற நீர்த்துறையையுடைய வூரனும் சிறந்த தந்தையின்பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் இடையாமத் திருளிலே கள்வனைப் போல வந்துற்றான்;
தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - கோண்மா நெடுங்கோட்டனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிற்ப, விளங்கிய, பொருந்த, புதல்வன், மகளிர்