நற்றிணை - 368. குறிஞ்சி
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி, கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி, கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ? நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த |
5 |
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய பசலை பாய்தரு நுதலும், நோக்கி, வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி, வெய்ய உயிர்த்தனள் யாயே- ஐய!- அஞ்சினம், அளியம் யாமே! |
10 |
ஐயனே! பெரிய புனத்திலுள்ள தினைக்கதிர்களைக் கொய்து கொண்டு செல்லுகின்ற சிறிய கிளிகளை வெருட்டி; கரிய அடியையுடைய வேங்கை மரத்திலே தொடுத்த கயிற்றூசலில் ஏறி ஆடிப் பக்கம் உயர்ந்த அல்குலுக்குத் தழையுடை அணிந்து; நும்முடனே அருவியாடி விளையாட்டு அயர்ந்தேமாய் வருதலினுங்காட்டில்; இனியதொரு காரியமுளதாகுமோ?; நெறிப்பமைந்த கருமை முதிர்ந்திருந்த கூந்தலில் நறுமணங் கமழ்தலைக்கொண்ட நல்ல புது நாற்றத்தையும்; பசலை பரவிய சிறிய நெற்றியையும் நோக்கி; பயனின்றிச் சிதைந்த உள்ளத்தையுடையளாய் எம் அன்னை; பிறிதொன்றனைச் சுட்டி நின்றாள் போல வெய்யவாகப் பெருமூச்செறிந்து வெகுளா நின்றனள்; அதனால் யாம் இல்வயிற் செறிக்கப்பட்டுப் பிறரால் இரங்கத்தக்க தன்மையேமாய் அஞ்சாநின்றேம்;
தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 366 | 367 | 368 | 369 | 370 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிறிய, சுட்டி, நோக்கி, பசலை, வேங்கை, அணிந்து