நற்றிணை - 364. முல்லை
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும் மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி, ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க, பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப, இன்ன சில் நாள் கழியின், பல் நாள் |
5 |
வாழலென் வாழி- தோழி!- ஊழின் உரும் இசை அறியாச் சிறு செந் நாவின் ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப, பல் ஆ தந்த கல்லாக் கோவலர் கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப, |
10 |
உயிர் செலத் துனைதரும் மாலை, செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே. |
தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! தலைவர் வருவேம் என்று சொல்லிப்போன பருவமோ வந்து நீங்குதலாயிற்று; பகற்பொழுதும் இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடொன்றி; நிரம்பிய இடி முழக்கத்தையுடைய மேகம் நீர் நிறையப் பெற்று இயங்காநிற்ப; வாடைக் காற்றுடனே பனிக்கு உண்டாகிய சின மெல்லாம் என்மீது வந்து தங்காநிற்ப; இவ்வாறாகிய நாள் சில கழிவன வாயினும்; முறையே இடிமுழக்கம் விசும்பிலே கேட்கப்படாத குற்றந் தீர்ந்த மாரியுடனே; வல்லோசை பயின்றறியாத சிறிய செவ்விய நாவினையுடைய மணியின் குளிர்ந்த இனிய ஓசை; ஊரின்கண்ணே புகுந்து மிக ஒலியாநிற்கும்படி; பலவாய ஆனிரையை நமது தெருவிலே செலுத்திவந்த பிறதொழிலைக் கல்லாத ஆயருடைய; கொன்றைப் பழத்தால் செய்த இனிய புல்லாங் குழல்; இவ்விடனெங்கும் இனிதாக ஒலியாநிற்ப; பிரிந்தோரின் உயிர் உடனே உடலை விட்டு நீங்கும்படி விரைந்து வருகின்ற மாலைப் பொழுதானது; ஒருசேர வந்து கூடினால்; அப்பால் எந்த நாளும் நான் உயிர் வாழ்ந்திரேன் காண்;
தலைமகள் பிரிவிடை மெலிந்தது. - கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 362 | 363 | 364 | 365 | 366 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாள், வந்து, உயிர், இனிய, குழல், இயம்ப, இருள், நீர்