நற்றிணை - 359. குறிஞ்சி
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக, கன்று தாய் மருளும் குன்ற நாடன் உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின், |
5 |
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை வாடலகொல்லோ தாமே- அவன் மலைப் போருடை வருடையும் பாயா, சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? |
மலையின் மேய்ந்த சிறிய கொம்பையுடைய செவ்விய பசு; அசைகின்ற குலையையுடைய காந்தளைத்
தீண்டி அக் காந்தண் மலரிலுள்ள தாதுக்கள் தன்மேல் உதிரப் பெற்றதனாலே நிறம்
வேறுபாடுடைமை நோக்கி; அதன் கன்று தன் தாயென் றறியாமல் மயங்காநிற்கும் மலைநாடன்,
உடுக்கும் தழை தந்தனன் அவை உடுத்திக் கொள்ளுந் தழையைக் கையுறையாகக் கொடுத்தனன்,
அவற்றை எம் நாட்டினர் உடாராதலின், யாம் உடுப்பின் யாய் அஞ்சுதும் யாங்கள் மட்டும்
உடுத்திக்கொள்ளின் அன்னை கேட்டற்கு யாது விடை சொல்ல வல்லேமென்று அஞ்சாநிற்பேம்; அத்
தழையுடையை மீட்டும் தலைவன்பாற் கொடுத்துவிடின் அதனால் அவன்படும் ஆற்றாமைக்கு
அஞ்சாநிற்பேம்; ஆகிய அவற்றிடையே அவனது மலையிலுள்ள போரைச் செய்தலையுடைய வரையாடும்
பாய்ந்து செல்லாத; தெய்வம் இருக்கின்ற மலைப் பக்கத்தின்கண்ணே உள்ள கொய்தற்கரிய
தழைதாம்; வாடுதலுடைய ஆகலாமோ?
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 357 | 358 | 359 | 360 | 361 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யாய், அஞ்சுதுமே, மலைப், அஞ்சாநிற்பேம், உடுப்பின், யாம், தீண்டி, கன்று, உடுக்கும், மேய்ந்த