நற்றிணை - 354. நெய்தல்
தான் அது பொறுத்தல் யாவது- கானல் ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த கானல் நண்ணிய வார் மணல் முன்றில், எல்லி அன்ன இருள் நிறப் புன்னை |
5 |
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின், கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் அளம் போகு ஆகுலம் கடுப்ப, |
10 |
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே? |
ஐயனே! கழிச்¢சோலையிடத்துக் காற்றாலசைகின்ற அடியில் உள்ளவற்றை வெட்டி ஒழித்தலானே நெடிய கரிய பனையினின்று விழுகின்ற காவிக் கொணர்ந்த ஓலையைச் சூழ்கின்ற வேலியில் மறைபடக்கட்டிய; கடற்கரைச் சோலையையடுத்த வெளிய மணலையுடைய முன்றிலின்கண்ணே; இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னையின் நல்ல பெரிய அடிமரத்திலே பிணித்துக்கிடத்தலானே; தங்குதல் கொண்ட தோணியையுடைய நீர்த்துவலை தெறித்துவிழும் கடற்கரையிடத்தே; கடுகிய வெயிலினாற் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்புக்களை ஏற்றி நீண்ட நெறியிலே செலுத்தும் பண்டிகள் நிரையாகச் செறிந்து செல்லுமாறு உரப்பி யோட்டுகின்ற உப்புவாணிகர்; அளத்து வெளியிலே போகும் பேரொலிபோல; நின்னால் செய்யப்பட்ட கேண்மையானது பழிச்சொல்லுக்கிடமாயிராநின்றது; அங்ஙனம் பரந்த அலரால் இற்செறிக்கப்பட்ட யாங்கள் அவ் வில்வயிற் செறிப்பை எவ்வாறு பொறுப்பது? ஆய்ந்து கூறுவாயாக!
தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம். - உலோச்சனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 352 | 353 | 354 | 355 | 356 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கானல்