நற்றிணை - 337. பாலை
உலகம் படைத்த காலை- தலைவ!- மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே- முதிரா வேனில் எதிரிய அதிரல், பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர், நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய |
5 |
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன், அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால் தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும் அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது, பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. |
10 |
தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகை மலரையும் பருத்த அடியையுடைய பாதிரியின் குறுகிய நுண்ணிய மயிரையுடைய சிறந்த மலரையும்; நறிய செங்கருங்காலி மலரையுங் கொய்து ஒருசேர உள்ளே செறித்திருந்த; பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போன்ற நறுமணம் ஒருங்கே அமையப்பெற்று அழகிய நல்ல நிறம் பொருந்திய; நீலமணி போன்ற ஐந்துபகுதியாக முடித்தற்குரிய சரிந்து விழுகின்ற; வண்டுகள் மெல்ல ஒலித்தலையுடைய நறிய கூந்தலினுடைய; அருமையாகப் பெறுகின்ற பெரிய பயனைக் கொள்ளாது; பிரிந்து உறைகின்ற பகுதியையுடைய பெரிய பொருளீட்டி வாழ்வோர்; இவ்வுலகத்தைப் படைத்தகாலம் முதற்கொண்டு அடைந்தாரைப் பாதுகாக்க வேண்டுமென்று அவ்வண்ணமே நிகழ்ந்து வரும் அறநெறியை மறந்துவிட்டனரோ?; அங்ஙனம் மறந்த தகுதிப்பாட்டினையுடையோர் சிறந்தோரேயாவார்;
தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம். - பாலை பாடிய பெருங்கடுங்கோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 335 | 336 | 337 | 338 | 339 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நறிய, போன்ற, பெரிய, தோழி, மலரையும், பிரிந்து, உடன், நிறம், கொள்ளாது, பாலை