நற்றிணை - 327. நெய்தல்
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின், பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச் சாதலும் இனிதே- காதல்அம் தோழி!- அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர் கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து, |
5 |
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய தாயம் ஆகலும் உரித்தே- போது அவிழ் புன்னை ஓங்கிய கானற் தண்ணம் துறைவன் சாயல் மார்பே. |
என்பால் அன்பு மிக்க தோழீ!; நம்மை விரும்பிக் களவொழுக்கத்தில் வந்து முயங்கும் சான்றோராகிய தலைவரை நாம் விரும்பி ஒழுகுதல் பழியுடையதாமெனில்; தூங்காதனவாய் அழுகின்ற கண்ணோடு ஏக்கத்தால் இளைத்து இறந்து போதலும் இனியதாகும்; அவ்வாறு இறப்பது இயல்புடையதன்றாயினும்; சால்புடையவர் தாஞ்செய்யும் கடமையிலே குறைபடார் என்று; சேரப்பொருந்தி உலகம் கூறுவது உண்டெனக்கொண்டு; அரும்புகள் மலர்கின்ற புன்னைமர மோங்கிய சோலையையுடைய தண்ணிய துறைவரது மெத்தென்ற மார்பை; நிலையாகப் பெறத்தக்க தன்மையுடையே மானாலும் அஃது உரியதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றை அடைவது நலமாகுமன்றோ?
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது. - அம்மூவனார் >
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 325 | 326 | 327 | 328 | 329 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கூறுவது, உலகம், என்று, நிலை, சான்றோர்