நற்றிணை - 323. நெய்தல்
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை நடுவணதுவேதெய்ய- மடவரல் ஆயமும் யானும் அறியாது அவணம் ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை |
5 |
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்: புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் தெரி மணி கேட்டலும் அரிதே; |
10 |
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே. |
நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழிய விட்டு நின்னுடைய உறவைக்கொண்ட வளையணிந்த முன்னங்கையையுடைய நல்ல நின் காதலிக்குத் தந்தையின்; சிறு குடியையுடைய பாக்கமானது; உயர்ந்து தோன்றுகின்ற இனிய கள்வடிதலையுடைய பனைகளின் நடுவின் உளதாயிராநின்றது கண்டாய்; மடப்பம் வருதலையுடைய தோழியர் கூட்டமும் யானும் ஒருவரையொருவர் அறியாதபடி அவ்விடத்திலேயே இருப்போம்; ஆங்கே புலியின் வரிபோன்ற மணல் மிக்க திடரில் இருக்கும் புன்னையினின்று உதிர்ந்த நிரம்பிய பராகத்தை உண்ணுகின்ற பெண்வண்டுகளுடனே; ஆண் வண்டுகளும் முரலுகின்ற இனிய ஓசை மிக்கு ஒலித்தலால் நினது திண்ணிய தேரின் விளங்கிய மணிகள் ஒலித்தலைப் பிறர் கேட்டலும் அரியதாகும்; அங்கு நீ வருதற்கு உரிய நெறியும் இதுவேயாகும்; ஆதலினாற் சேர்ப்பனே மறவாது வந்து கூடுவாயாக!
தோழி இரவுக்குறி நேர்ந்தது. - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 321 | 322 | 323 | 324 | 325 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இனிய, கேட்டலும், நின், யானும்