நற்றிணை - 320. மருதம்
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று; எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்- தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின், இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல் ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், |
5 |
காரி புக்க நேரார் புலம்போல், கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு, காவல் செறிய மாட்டி, ஆய்தொடி எழில் மா மேனி மகளிர் விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. |
10 |
ஊரிலே செய்யப்படுந்¢ திருவிழாவுஞ் செய்து முடிந்தது; மத்தளமும் ஓசை யொழிந்தது; இக் காலத்து இவள் யாது கருதினாளோ? என்று கேட்பாயாயின் கருதியது கூறாநிற்பேன்; ஒருநாள் உடுக்குந் தழையை அணிந்து அத் தழையசையும் அல்குலையுடையாளாய்த் தெருவின்கண்ணே இவ்விளையோள் சென்ற அவ்வொரு காரணத்திற்காக; பழைமையாகிய வெற்றியையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான் உடனே அவ்வோரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே; புகுந்ததைக் கண்ட அக் காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சலிட்டாற்போல; இவ்வூரிலே கல்லென்னும் நகையொலி உண்டாயிற்று; அந் நகையொலியைக் கேட்டலும் இவள் நங்களுடைய கேள்வரைக் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்றெண்ணி ஆராய்ந்தணிந்த வளையையுடைய அழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதர்கள் காவல் செறியச் செய்து; தம்தம் கொழுநரைப் பாதுகாத்துக்கொண்டு நன்மையடைந்தார்கள்; அங்ஙனம் அவரவர் பாதுகாத்ததனால் இவள் செயல் பயன்படாமையின் இவனைக் கைக்கொண்டகன்றனள் காண்; இவட்கு இஃதோர் அரியசெயலன்று;
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 318 | 319 | 320 | 321 | 322 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இவள், செய்து, காவல், கொன்ற, அணிந்து