நற்றிணை - 316. முல்லை
மடவது அம்ம, மணி நிற எழிலி- 'மலரின் மௌவல் நலம் வரக் காட்டி, கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்' என, கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் |
5 |
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக் கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, தளி தரு தண் கார் தலைஇ, விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே. |
10 |
தோழீ! கேட்பாயாக! முன்பு மலரையுடைய முல்லையைச் செவ்வையாகக் காட்டிக் கயல் போன்ற மையுண்ட கண்ணையும் கனவிய குழையையுமுடையாய்!; இம் முல்லை நின் பற்கள்போன்ற அரும்பை யீனும் பொழுதில் யாம் நின்னை யெய்துவேமென்று கூறி; இடமகன்ற ஆகாயத்தில் எழுகின்ற திங்களோ என ஐயுற்றறியும்படியாகிய நினது நல்ல நெற்றியைத் தடவிக் கொடுத்துச் சென்ற நங் காதலர்; தாம் நம்மை விரும்பும் விருப்பமுடையராய் வருதலின்றி வாராது அங்கிருக்கும் இக்காலத்தில்; சுரத்து நெறியையுடைய மலைமேலே அதன் பக்கமெல்லாம் மறையுமாறு காலிறங்கி; நீர்த்துளியைப் பெய்யும் தண்ணிய மேகம் அம் முல்லைகள் அரும்பும்படி மழையைப் பெய்து; அகன்ற ஆகாயத்தினிடத்திலே இடியிடித்தலையுஞ் செய்யாநின்றது; ஆதலின் நீலமணிபோலும் நிறத்தையுடைய இம் மேகம் அறியாமை யுடையதுகாண்; இது மிக்க வியப்பு;
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - இடைக்காடனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 314 | 315 | 316 | 317 | 318 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், மேகம், கயல், முல்லை