நற்றிணை - 313. குறிஞ்சி
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ, பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப, தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து, ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ, காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு |
5 |
யாங்கு ஆகுவம்கொல்?- தோழி!- காந்தள் கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின் மீள்குவம் போலத் தோன்றும்- தோடு புலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆனா, |
10 |
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே. |
தோழீ! கதிர் கொய்யும் பதம் கொள்ளநின்ற நாம் கூவிக் கிளியோப்பும் தினைப்புனமெல்லாம்; மேல் இலை காய்ந்து மலையருவி ஒலித்தாற்போல ஒலித்தல் அமையாவாயிராநின்றன; அதனால் யாம் காந்தளின் கமழ்கின்ற குலைமலர்ந்த விருப்பமிகுஞ் சாரலின்கண்ணே கூதாளி படர்ந்து மலர்ந்த நறிய சோலை தனிமையாகும்படி; கைவிட்டு ஊரிடத்து மீண்டு செல்வேம் போல எனக்குத் தோன்றாநிற்கும்; இங்ஙனமாகையில் தடைமுழுதும் அழித்துக் கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில் நாட்காலையின் மலர்ந்த மிக்க புதிய பூ பொன்னைப் பணி செய்யும் பொற்கொல்லன் உடைய கைவினையைப் போல; மிக அழகுபொருந்திய தாழ்ந்த பலவாய கூந்தலில் அணிபெறச் சூடி; காண்பதற்கு அளவு கடந்த விருப்ப மிகுதலாலே; நம்மை இப்பொழுது கைவிட்டிருக்கின்ற தலைவனை எவ்வாறு சென்று சேர்வோம்?
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது. - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 311 | 312 | 313 | 314 | 315 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மலர்ந்த, நாம், ஒலித்தல், தோழி