நற்றிணை - 293. பாலை
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி, பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன் இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து, விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், |
5 |
பெரு விதுப்புறுகமாதோ- எம் இற் பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ, கொண்டு உடன் போக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாயே. |
நீலமணி போலும் பூங்கொத்தினையுடைய நொச்சிமாலையைச் சூடிப் பலிகளிடுதற்கு அமைந்த கையையுடைய பரிய முதிய குயவன்; தன்னால் இடப்படும் பலியை உண்ணுதற்கு அணங்குகளையும் காக்கைகளையும் அழையாநிற்கும் அகன்ற இடத்தையுடைய மன்றத்தின்கண்ணே; திருவிழாச் செய்தலை மேற்கொண்ட பழைமையான வெற்றியையுடைய இம் மூதூரிடத்தில்; எம் புதல்வியுடன் விளையாடும் நெய்தன் மலர் போலும் கண்ணையுடைய தோழியரைக் காணும்போதெல்லாம்; யாம் பெரிய நடுக்கமுற்றுத் துன்பப்படுவதுபோல; எம் மனையகத்திருந்த பொலிவு பெற்ற கூந்தலையுடைய எம் புதல்வியை மருட்டிப் பலவாய பொய்ம்மொழிகளைக் கூறி; தன் சொற்படி ஒழுகச் செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்ற வன்கண்மையுடைய காளையாவானை ஈன்ற தாயும்; இத்தகைய கொடிய புதல்வனை ஈன்றதனாலே அவள் பெரிய நடுக்கமுற்றுத் துன்பம் அடைந்தொழிவாளாக!;
தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம். - கயமனார் >
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 291 | 292 | 293 | 294 | 295 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நடுக்கமுற்றுத், பெரிய, போலும், ஈன்ற, குயவன்