நற்றிணை - 283. நெய்தல்
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!- வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய, இன்னை ஆகுதல் தகுமோ- ஓங்கு திரை |
5 |
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி, ஏமுற விளங்கிய சுடரினும், வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே? |
ஒள்ளிய நெற்றியையுடைய நுளைச்சியர் அகன்ற கழியின்கண்ணே பறித்துவந்த மகளிர் கண்ணை நேராக ஒத்தலையுடைய மணங்கமழ்கின்ற நறிய நெய்தன் மலர்; அகன்ற கையாலே கோலஞ்செய்த சிறிய மனையை அலங்கரிக்குந் துறையையுடைய தலைவனே!; உயர்ந்து வரும் அலையையுடைய கடலின்மீது பலருந் தொழுமாறு தோன்றி யாவரும் மகிழ விளங்கிய ஞாயிற்றினுங் காட்டில் வாய்மை விளங்கிய; நினது சொல்லை விரும்பிய எம்மிடத்துள்ள; அறிவுடையோரால் ஆராய்ந்து கண்ட பழைய அழகு கெடும்படியாக; நீ இத் தன்மையை உடையையாயிருத்தல் தகுதியுடையதொரு காரியமாகுமோ? ஆதலின் ஆராய்ந்து ஒன்றனைச் செய்வாயாக!;
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, 'வேறுபடாது ஆற்றினாய்' என்று சொல்லியதூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 281 | 282 | 283 | 284 | 285 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - விளங்கிய, அகன்ற, ஆராய்ந்து, தோழி, வாய்மை, நெய்தல், ஓங்கு, தோன்றி, மகளிர்