நற்றிணை - 257. குறிஞ்சி
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ, மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின், கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்- அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் |
5 |
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம் நல் மலை நாட!- நயந்தனை அருளாய், இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக் கடு மா வழங்குதல் அறிந்தும், நடு நாள் வருதி; நோகோ யானே. |
10 |
அரும்புகள் முக மலர்ந்த கரிய காம்பையுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறிய மலர் பாறைமேலுதிர்ந்து பரவாநிற்கும் நல்ல மலைநாடனே!; எம்பால் விரும்பி அருள் செய்யாயாகி; ஓயாத முழக்கமொடு மழை மிகுத்து இடியிடித்து மேகம் ஓங்கிச் சென்று பெய்யத் தொடங்கிய குளிர்ச்சிமிக்க மலையிலே; மூங்கில் நெருங்கிப் பரந்த மிக உயர்ந்த நெடிய சிகரத்தின் கண்ணே; விளங்கிய வெளிய அருவியையுடைய அகன்ற மலைப்பக்கத்தில்; வழிப் போகுவார் யாருமில்லாத நீர் விளங்கிய சிறிய நெறியிலே; கொடிய சிங்கமுதலிய விலங்குகள் இயங்குவதனை அறிந்துவைத்தும்; இரவு நடுயாமத்தில் நீ வாராநின்றனை; இதற்கு யான் நோகா நின்றேன் அல்லேனோ?;
தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது. - வண்ணக்கன் சோருமருங்குமரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 255 | 256 | 257 | 258 | 259 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - விளங்கிய, பொன்