நற்றிணை - 240. பாலை
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே- வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள் கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி, ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், |
5 |
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில், கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி, ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல் யானை இன நிரை வெளவும் கானம் திண்ணிய மலை போன்றிசினே. |
10 |
கூர்மையாயெழுந்த வெளிய பற்களையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளைமையுற்ற தோழீ!; நம் காதலர் தாம் கையாலணைத்து முயங்கும் புணர்ச்சியானது மெய்யிலே பொருந்த வேண்டாவென்று மாறுபடுதலானே ஏங்குகின்ற உயிர்த்தலோடு பொருந்திய பருத்த கொங்கையையுடைய என் மெய்யானது; இனித் தனியே கிடந்து துயிலுவதனாலே துன்பப்படுந் தன்மையதாயிராநின்றது எனினும்; வெயிலால் வெப்பமுற்ற பரல்மிக்க பள்ளத்தின் ஒரு புறத்திலே குந்தாலியாற் குழித்த கிணற்றையடைந்து; பசுவின் நிரையைப் பாதுகாக்கும் ஆயர் பறித்த சிறுகுழியிலுள்ள நீரை; யானை வரிசையாகச் சென்று உண்ணாநிற்கும்; அவர் சென்ற கானமானது திண்ணிய மலைபோல அழியாத தன்மையதாய் நின்று கருதுகின்ற எனக்கு அச்சத்தைத் தாராநின்றது; அத்தகைய அந்தக் கொடிய சுரமுற்ற பாலை நிலத்தினைப் படைத்த கொடியோன்றானும்; அதன்கட் பையச் சென்று நனி துன்புற்று வருந்துவானாக!
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம். - நப்பாலத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 238 | 239 | 240 | 241 | 242 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சென்று, திண்ணிய, யானை, குழித்த, பாலை