நற்றிணை - 24. பாலை
'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின், ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு, கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம் வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் |
5 |
சேறும், நாம்' எனச் சொல்ல- சேயிழை!- 'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே; செயல்படு மனத்தர் செய்பொருட்கு அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே. |
சேயிழாய்!; நிலம் பிளவுபடுமாறு இறங்கிய வேரும் பெரிய கிளைகளும்; அடியில் உடும்புகள் செறிந்தாற்போன்ற பொரிந்த செதில்களும் உடைய நெடிய விளாமரத்தின்; கிளையில் மூக்கு ஊழ்த்து விழுந்து கம்பலத்தை விரித்தாலொத்த பசிய பயிரின் கண்ணே ஆடுதலொழிந்த பந்து கிடப்பது போலப் பரவியிருக்கும்; அவ்விளாம்பழங்களையே உணவாகவுடைய அயனாட்டிலே செல்லுதற்கரிய பாலைவழியில்; யாம் செல்லா நிற்பேமென்று தலைவர் கூறலும்; அது நல்லதொரு காரியமென்று விருப்பத்தோடு கூறினை! ஆதலின் நீ நல்லதொன்றனைச் செய்தனைகாண்!; ஆடவர் வினைமேற்கொண்ட உள்ளத்தராய்ப் பொருளீட்டுதற்கு அகலா நிற்பர்; அங்ஙனம் அவர் அகலும்பொழுது மறுத்துக் கூறாமல் உடன்படுவதே அதற்குரிய பண்பாகும்.
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. - கணக்காயனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஆடவர், நன்று, மூக்கு