நற்றிணை - 237. பாலை
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய், பனி மலி கண்ணும் பண்டு போலா; இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உட்கொண்டு ஊடின்றும் இலையோ?- மடந்தை!- |
5 |
உவக்காண் தோன்றுவ, ஓங்கி- வியப்புடை இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல, உலகம் உவப்ப, ஓது அரும் வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! |
10 |
மடந்தாய்!; வியப்புடைய இரவலர் வரும் பொழுது; அவர்கட்குக் கொடுப்பது கருதி "ஆய்அண்டிரன்" சேர்த்துவைத்த யானைத்திரள் போல; உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையச் சொல்லுதற்கரிய வெவ்வேறாகிய உருவத்தோடு எழுகின்ற மேகங்கள்; ஓங்கித் தோன்றுவனவற்றை உவ்விடத்தே காணாய்! இஃது அவர் குறித்த பருவமன்றோ?; இதுகாறும் மிகப் பசந்து தோளும்¢ வாட்டமடைந்து; நீர் வடிகின்ற கண்களும் முன்போல் இன்றி வேறுபாடு கொள்ள; இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம்சென்று ஒழிந்தனரே என்று கூறப்படுகின்ற புலவியை நீ நின் உள்ளத்தேகொண்டு; ஊடுகின்றதும் இல்லையோ? இஃதென்ன வியப்பு;
தோழி உரை மாறுபட்டது. - காரிக்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 235 | 236 | 237 | 238 | 239 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இரவலர், காதலர், உயிர், பசந்து, மிகப்