நற்றிணை - 228. குறிஞ்சி
என் எனப்படுமோ- தோழி!- மின்னு வசிபு அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர, கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள், பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து அருளான்கொல்லோ தானே- கானவன் |
5 |
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம், வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ, அழுந்துபட விடரகத்து இயம்பும் எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே? |
தோழீ! கானகத்து வாழும் வேட்டுவனது முதுகுபோன்ற பெரிய துதிக்கையையுடைய களிற்றியானை; அச்சங்கொண்ட வில்லினின்று எய்யுங்கணைக்கு அஞ்சி (ஓசையானது) மலைப்பிளப்பின் ஆழத்தே சென்று மோதுமாறு பிளிற்றா நிற்கும்; குதித்து விழுகின்ற அருவியையுடைய மலைக்குரிய நங்காதலன்; மின்னலாலே இருளைப் பிளந்துகொண்டு முழங்குகின்ற குரலையுடைய மேகம்; தான் சூன்முதிர்த லுடைமையால் அக்கடன் தீருமாறு கண்ணொளி மறையும்படி பரத்தலினாலே செறிந்த இருளையுடைய நடுயாமத்தில்; இயல்பு இல்லாத அரிய வழியில் வந்து எம்மாட்டு அருளுதல் செய்யானோ?; இப்பொழுது அவன் வந்து தலையளி செய்யாதிருத்தற்குக் காரணந்தான் என்னென்று சொல்லப்படுமோ?
தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - முடத்திருமாறனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 226 | 227 | 228 | 229 | 230 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, தோழி