நற்றிணை - 21. முல்லை
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர் அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ, வேண்டு அமர் நடையர், மென்மெல வருக! தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- |
5 |
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் காமரு தகைய கானவாரணம் பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, |
10 |
நாள் இரை கவர மாட்டி, தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே! |
பாகனே ! விரைந்து செல்லுதலாலே வருந்திய மிக்க செலவினையுடைய நம் வீரர்; அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ வேண்டு அமர் நடையர் மெல்மெல வருக. இடையிற் செறித்த கச்சையின் பிணிப்பை நெகிழ்த்து ஆங்காங்குத் தங்கித் தாம் தாம் விரும்பிய வண்ணம் அமர்ந்த நடையராய் மெல்ல மெல்ல வருவாராக; உருக்கலுற்ற நறிய நெய்யிற் பாலைச் சிதறினாற் போன்ற கடைகின்ற குரலையுடைய மிடற்றினையுடைய அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளமைந்த கண்டார்க்கு விருப்பம் வரும் தகுதிப்பாட்டினையுடைய கானங்கோழி; மழை பெய்தநீர் வடிந்த அகன்ற நெடிய காட்டிலே சுவறாத ஈரமணலை நன்றாகப் பறித்து; நாட்காலையில் இரையாகிய நாங்கூழைக் கவர்தலும் அதனைக் கொன்று; தன் பெடைக்கு ஊட்ட வேண்டி அப் பெடையை நோக்கிய பெருமை தக்கிருக்கின்ற நிலையை உங்கே பாராய்!; ஆதலின் நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுகாறுந் தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக!;
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மருதன் இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாம், வருக, நடையர், நோக்கிய, விரைந்து, மெல்ல, தாம், அமர், வேண்டு, செறி, அரைச், கச்சை, யாப்பு, அசைஇ, அழித்து, வருந்திய