நற்றிணை - 2. பாலை

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு, ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, |
5 |
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே; வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! |
10 |
சுரமோ, ஆழ்ந்துபடக் கிடந்த பெரிய குளிர்ச்சியையுடைய குன்றத்து; தழைத்த வலிய ஈத்த மரங்களையுடைய காற்றுச் சுழன்று வீசும் காட்டின் கண்ணே; நெறிகொண்டு செல்லும் மக்களுடைய தலையை மோதியதனாலே குருதி படிந்த சிவந்த மாறுபட்ட தலையையுடையனவும்; இரத்தம் பூசிய வாயையுடையனவுமாகிய பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்; இம் மாலைப் பொழுதில் தாம் பதுங்கியிருக்கும் மரலின் தூஊகளை நிமிர்ந்து நோக்கா நிற்கும் இண்டங் கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கையையுடையவாகும், இத்தகைய சுரத்தின்கண்ணே; கூரிய பற்களையுடைய மெல்லியளாகிய மடந்தையை முன்னே செல்லவிடுத்துப் பின்னே; இவ்விராப் பொழுதிற் செல்லா நிற்கும். இவ்விளைஞனுள்ளமானது; காலொடுபட்ட மாரி மால்வரை மிளிர்க்கும்; காற்றொடு கலந்த மழை பெய்யுங் காலத்திற் பெரிய துறுகற்களைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியினுங்காட்டிற் கொடியதா யிராநின்றது;
உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. - பெரும்பதுமனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, நிற்கும், மிளிர்க்கும், மாரி, குன்றத்து, பெருந்