நற்றிணை - 199. நெய்தல்
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு, நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி, அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து, உளெனே- வாழி, தோழி! வளை நீர்க் |
5 |
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி, வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர், நீல் நிற விசும்பின் மீனொடு புரைய, பைபய இமைக்கும் துறைவன் |
10 |
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே! |
தோழீ! வாழி! சூழ்ந்த கடனீரில் விரைந்து செல்லும் சுறாமீனைப் பிடிக்க வலை வீசி எறிந்த வளைந்த மீன் பிடிக்கும் படகினையுடைய பரதவர்; இழுக்கும் விசையையுடைய தூண்டிலின் இடையிடையே அமைந்து காற்று மோதுதலானே; எரிகின்ற கற்றை சாய்ந்து பரவிய நெருங்கிய விளக்கின் ஒளி நீல நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே ஒளிரும் மீன்களைப் போல; சிறுகி மெல்ல மெல்ல ஒளி வீசாநிற்கும் துறையையுடைய தலைவனது; உடம்பை அணைந்து முயங்கும் முயக்கத்தை யான் அடையப் பெறாத விடத்து; உயர்ந்த மணல் மிக்க திடா¢ சூழ்ந்த நீண்ட கரிய பனையினது; நெருங்கிய மடலிற் கட்டிய குடம்பையின் கண்ணே யிருக்கின்ற பிரிவுற்று வருந்துதலையுடைய வெளிய நாரை ; இரவு நடுயாமத்தே நரலுந்தோறும் உருகி ; அள்ளலாகிய குழம்பு போன்ற என்னுள்ளத்தொடு என் மனமும் உடைந்து இன்னும் உயிர் உடையேனாயிரா நின்றேன்; என் உயிர்தான் எவ்வளவு வன்¬மையுடையது காண் !
வன்புறை எதிரழிந்தது. - பேரி சாத்தனார் >
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 197 | 198 | 199 | 200 | 201 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கற்றை, சூழ்ந்த, நெருங்கிய, மெல்ல, பரதவர், எறிந்த, உருகி, உடைந்து, வாழி, மணல்