நற்றிணை - 197. பாலை
'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே; கண்ணும் தண் பனி வைகின; அன்னோ! தௌந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என, ஆழல், வாழி- தோழி!- நீ; நின் |
5 |
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு, வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய, பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் பொலந் தொடி போல மின்னி, கணங் கொள் இன் இசை முரசின் இரங்கி, மன்னர் |
10 |
எயில் ஊர் பல் தோல் போலச் செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே. |
தோழீ! தோள்கள் வளைகள் நெகிழ்ந்தன நெற்றி படர்ந்த பீர்க்க மலர் போலப் பசலை பரந்தது; கண்களும் தண்ணிய நீர் பெருகின; இவை இங்ஙனமாதல் திண்ணமாக எம் உயிர் இறந்தொழிதற் பொருட்டே என்பதனை யாம் நன்றாகத் தௌ¤ந்துகொண்டோம் என்று; அழாதே கொள்! இவ்விடரொழிந்து நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; நினது தாழந்து தழைந்த கூந்தல் போல இறங்கிய காலுடனே; வண்டுகள் பொருந்திய புதிய மலர்களை ஒள்ளிய நீர்த்துறையின்கண்ணே கொய்து கொணர்ந்த; பெரிய மடப்பத்தையுடைய மகளிரின் முன்கையிலணிந்த சிறிய கோற்றொழிலமைந்த பொன்னாலாகிய தொடிபோல மின்னி; கூட்டங்கொண்ட இனிய ஒலியையுடைய முரசுபோல முழங்கி; அரசர்களுடைய அரணாகிய மதில்மேலே பகைவருடைய படைசென்று பாயாதவாறு ஓம்பாநின்ற பலவாகிய கிடுகுபோல விசும்பிலே செல்லும் மேகம்; அவரது நல்ல மலை நாட்டின் கண்ணே தவழாநிற்கும்; அம்மழை நின் கூந்தல் போலிருத்தலானே அதனைக் காண்டலும் நின்னைக் கருதி இன்னே வருகுவர் காண்;
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது. - நக்கீரர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 195 | 196 | 197 | 198 | 199 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மின்னி, கொள், கூந்தல், மலர், நின், உயிர், தோழி, தொடி