நற்றிணை - 19. நெய்தல்
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை, பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு, நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி, விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
5 |
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க, செலீஇய சேறிஆயின், இவளே வருவை ஆகிய சில் நாள் வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே! |
இறாமீனின் புறம் போன்ற சருச்சரை பொருந்திய பெரிய அடியையுடைய சுறாமீனின் முகத்தில் நீண்டுள்ள கொம்புபோன்ற முட்களையுடைய இலையையுடைய தாழையானது, பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு பெரிய களிற்றியானையின் மருப்புப்போன்ற அரும்பு முதிர்ந்து; நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல் போல வேறாகத்தோன்றி; விழாவெடுக்கும் களமெல்லாம் கமழா நிற்கும் வலியநீரையுடைய கடற்பரப்பிற்குத் தலைவனே!; மிக்க மணிகள் கட்டிய நெடிய நினது தேரைப் பாகன் செலுத்தலாலே நின்னூர்க்குச் செல்லும் பொருட்டுப் போகாநின்றனை யாதலால், வருவையாகிய சின்னாள் பின்பு நீ வருவாய் என்று குறிப்பிட்ட சிலநாளளவும்; இவள் உயிர்வாழ மாட்டாள் என்பதை நன்றாக அறிந்துகொண்டு செல்வாயாக!
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது. - நக்கண்ணையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்ன, அரும்பு, பெரிய, பாகன், முதிர்பு, மருப்பின்