நற்றிணை - 188. குறிஞ்சி
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை, ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் மெல் விரல் மோசை போல, காந்தள் வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! |
5 |
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என, அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத் தேம் முதிர் சிலம்பில் தடைஇய வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே. |
ஆழ்ந்த சுனையில் நீரையுடைய மலைப்பக்கத்தில் முளைத்த வாழையின் வளைந்த மடலினின்று போந்த கூ£¤ய நுனியையுடைய குவிந்த முகையானது; ஒள்ளிய கலனையுடைய மாதர்களின் விளங்கிய வளையோடு பிணிப்புற்ற மெல்லிய விரலிலணிந்த விரலணிபோல; செங்காந்தளின் வளவிய இதழிலே தோயாநிற்கும் விசும்பில் நீண்டு பொருந்திய மலையையுடைய தலைவனே!; எம் தலைவி ஒரு காலத்து நன்றாக முடிவதொரு காரியமும் மற்றொரு காலத்துத் தீதாக வரும் என்று நின் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்தின்கண்ணே இரந்து பின்னிலை நின்ற அக் காலத்து நன்றாக அறிந்தனளாயிருப்பின்; குன்றத்ததாகிய தேன்முற்றிய பக்கமலையில் முளைத்து வளைந்த அடியையுடைய மூங்கில் போலும் பருத்ததோள் இக் காலத்து நெகிழ்வாளல்லள்; அது கழிந்த செயலாகி முடிந்ததாகலின் இனிக் கூறி என்ன பயனாம்?
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 186 | 187 | 188 | 189 | 190 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - காலத்து, நன்றாக, வளைந்த, வரும், சிலம்பில்