நற்றிணை - 185. குறிஞ்சி
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி, காமம் கைம்மிக, கையறு துயரம் காணவும் நல்காய் ஆயின்- பாணர் பரிசில் பெற்ற விரி உளை நல் மான் கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, |
5 |
இரவலர் மெலியாது ஏறும், பொறையன் உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின், அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து, பறவை இழைத்த பல் கண் இறாஅல் தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய |
10 |
வினை மாண் பாவை அன்னோள் கொலை சூழ்ந்தனளால்- நோகோ யானே. |
பாணர் பரிசிலாகப் பெற்ற விரிந்த புறமயிரையுடைய நல்ல குதிரையின்; கவிந்த குளம்பு மோதுதலாலே செப்பமாகிய மலைமேலுள்ள சிறிய நெறியின்கண்ணே; மெலியாமல் இரவலர் ஏறுகின்ற பொறையனது; புகழமைந்த கொல்லி மலையின் மேல்பால்; அகன்ற இலையையுடைய காந்தளின் அசையும் பூங்குயிலே பாய்ந்து தேனை நுகர்ந்து வந்து வண்டுகளால் வைக்கப்பட்ட பலவாய கண்களையுடைய இறாலின்கண்; மிக்க தேனையுடைய நெடிய அம் மலையிலே; தெய்வத்தாற் செய்துவைத்தலிற் செயற்கை மாட்சிமைப்பட்ட பாவை போன்ற அவள்தான்; என்னைக் கொலைசெய்யும் வண்ணம் ஆராய்ந்து நன்றாக அறிந்து கொண்டனள்; அங்ஙனம் சூழ்ந்தவளது சூழ்ச்சியிலே பட்டு இன்னும் இறவேனாகி அடங்காத நோயுடனே பலபலவாக எண்ணிக் கழிக்கின்ற துன்ப மிகுதலானே கலக்கமெய்தி; காமமானது அளவுகடந்து பெருகுதலானே என் செயலொருங் கழிந்து வருந்துகின்றேன், இங்ஙனம் வருந்தி அழிந்தொழிவதனை நீ கண்ணாலே கண்டுவைத்தும்; அவளுடன் கூட்டுவிக்கு முயற்சியை நீயே செய்யாதொழியின்; அது நின்னால் வந்ததன்று என் ஊழ்வினையால் வந்ததென அவ்வூழினை யான் நோவா நிற்பேன்;
பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 183 | 184 | 185 | 186 | 187 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பாய்ந்து, பாவை, இரவலர், குளம்பு, பெற்ற, பாணர்