நற்றிணை - 154. குறிஞ்சி
கானமும் கம்மென்றன்றே; வானமும் வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி, பல் குரல் எழிலி பாடு ஓவாதே; மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை |
5 |
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது துஞ்சுதியோ- இல, தூவிலாட்டி!- பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் வாரார் ஆயினோ நன்றே; சாரல் |
10 |
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும், நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே? |
ஏடீ! வலியிலாதாய்!; காடு கம்மென்று ஒலியடங்குவதாயிற்று; ஆகாயமும் மலைமுழைபோன்ற கரிய இருளைப் பரப்பிப் பலவாய இடிமுழக்கத்தையுடைய மேகம் முழங்குவதும் நீங்குகின்றிலது; மேகம் தவழும் குறுங்காட்டினிடத்திலே களிற்றை வலத்தே விழக் கொன்ற வெய்ய சினத்தையும் அகன்ற வாயையுமுடைய புலியேறு; யாவரும் அஞ்சுமாறு முழங்காநிற்கும்; இவ்வோசையனைத்தையும் செவியில் ஏறட்டுக்கொள்ளாது நீ தூங்குகின்றனையோ? பேர் அஞர்பொருத புகர்படு நெஞ்சம் நீர் அடு நெருப்பில் தணிய பெரிய துன்பம் வந்து மோதுதலானே குற்றப்பட்ட நெஞ்சத்தின் கொதிப்பானது நீர் பெய்த நெருப்புப் போலத் தணியும்படி; இன்று அவர் வாராது விட்டாலோ நல்லதாகும்; சாரலிலே குறுக்கிட்ட மலையின்கண்ணே செல்லுநெறியை நினையுந்தோறும்; நிலையில்லாத என் நெஞ்சமானது அந்த நிலத்தின்கண் பரந்து செல்லாநிற்கும்; யான் யாது செய்யமாட்டுவேன்?
இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது. - நல்லாவூர் கிழார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 152 | 153 | 154 | 155 | 156 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நீர், பரந்து, மேகம், அவர், தணிய, நெஞ்சம், பேர், இன்று