நற்றிணை - 142. முல்லை
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள், பாணி கொண்ட பல் கால் மெல் உறி ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி, பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
5 |
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் புறவினதுவே- பொய்யா யாணர், அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும், முல்லை சான்ற கற்பின், |
10 |
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே. |
இராப்பொழுதாயிருப்பினும் வந்த விருந்தைக் கண்டு மகிழா நிற்கும் யான் கூறிய சொற்பிழையாதபடி இல்லிலிருந்து நல்லறஞ் செய்யும் கற்பினையும்; மென்மையாகிய சாயலையும் உடைய இளைய மாறாத நங் காதலி உறைகின்ற பொய்யாத புது வருவாயினையுடைய ஊரானது; மழை காலிறங்கிப் பொழிந்த விளங்கிய பெயலின்¢ இறுதி நாளிலே; கையிற் கொண்ட பலவாகிய காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியுடனே தீக்கடைகோல் முதலாய கருவிகளை இட்டு வைத்த தோற்பையை ஒருசேரச் சுருக்கிக்கட்டி; பனையோலைப் பாயோடு முதுகிற் கட்டியிட்ட பால் விலைகூறி ஏகும் இடையன்; நுண்ணிய பலவாய மழைத்துளி தன்னுடம்பிலொருபுறம் நனைத்தலைச் செய்யக் கையின் சோலையின்றி அதன்மேல் ஒருகாலை வைத்த ஒடுங்கிய நிலையோடு நின்று வாயைக் குவித்து ஊதும் 'வீளை' எனப்படுகிற அழைத்தலாகிய குறிப்பொலியை அறிந்து; சிறிய தலையையுடைய யாட்டின் தொகுதி பிறபுலம் புகுதாது மயங்கி அவ்வண்ணமே தங்காநிற்கும் ஈண்டுள்ள புறவின் கண்ணதாயிரா நின்றது; ஆதலின் நமது தேர் விரைந்து செல்லின் அவளை இன்னே மகிழ்ந்து முயங்கலாகும்;
வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 140 | 141 | 142 | 143 | 144 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வைத்த, இடையன், பால், மெல், கொண்ட, கால், முல்லை