நற்றிணை - 129. குறிஞ்சி
பெரு நகை கேளாய், தோழி! காதலர் ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச் செல்ப என்ப, தாமே; சென்று, தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை |
5 |
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை- கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப, படு மழை உருமின் உரற்று குரல் நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே. |
தோழீ! காதலர் ஒரு நாள் நின்னைப் பிரியினும் நின் உயிரின் தன்மை வேறுபடுகின்ற பொலிவுற்ற கூந்தலையுடையாய் ! பெரு நகை கேளாய் யாவரும் பெரிதும் நகைக்க வல்ல ஒரு செய்கையைக் கேட்பாயாக!; நம்மை அவர் இங்கு நீங்குமாறு கைவிட்டுத் தாம் ஒருவரே தமியராய் வினைவயிற் செல்லக் கருதியுள்ளார் என்று உழையர் கூறாநிற்பர்; அவர் தனியே சென்று தமது வினை முடித்து வருமளவும்; நிறம் விளங்கிய படப்பொறியையுடைய அரவினது தலை நடுங்கும்படி பெய்கின்ற மழையிடையிட்ட இடியினது முழங்குகின்ற முழக்கத்தை; இரவு நடுயாமத்துந் தமியமாய் இருந்து கேட்டு நாம் நமது மனையின்கண்ணே அதன் மேலும் உயிர் வாழந்திருக்ககடவே மென்றுங் கூறாநிற்பர்; இஃதென்ன கொடுமை காண்!
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது. - அவ்வையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 127 | 128 | 129 | 130 | 131 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாள், சென்று, வினை, அவர், கூறாநிற்பர், என்ப, உயிர், கேளாய், தோழி, காதலர், பெரு