நற்றிணை - 127. நெய்தல்
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து, உவன் வரின், எவனோ?- பாண!- பேதை கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், |
5 |
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய ஈனாப் பாவை தலையிட்டு ஓரும், 'மெல்லம் புலம்பன் அன்றியும், செல்வாம்' என்னும், 'கானலானே'. |
பாணனே! எம் பேதையானவள் கொழுவிய மீனை யுண்ணுதலையுடைய செழுமையுற்ற மாளிகையில் நிறைந்த தன் ஐயன்மார் தமது தொழிலன்றி ஏனைய ஒன்றுங் கல்லாத சினமுடையராயிருப்பவும்; பண்டு தோழியரோடு தான் வண்டல் விளையாட்டு அயர்தற்குத் தான் ஈனாது வைத்த பாவை தலைக்கீடாகக் கொண்டு; அந்த மெல்லிய கடற்கரைச் சேர்ப்பனை அல்லாமலும் கழிக்கரைச் சோலையின்கண் விளையாடச் செல்வோமாக என்று கூறாநிற்பாள்; அதனால் கரிய கழியிலே இரை தேடித் துழாவிய ஈரிய புறத்தையுடைய நாரை தன் சிறகை உதறுகின்ற திவலையாலே குளிர்ந்து நடுங்குகின்ற நமது பாக்கத்தில்; அந்த மெல்லம்புலம்பன் வருதலால் யாது பயனோ? ஆதலின் அவன் இனி வரற்பாலன் அல்லன்காண்!
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது. - சீத்தலைச் சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 125 | 126 | 127 | 128 | 129 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தான், பாவை, அந்த, பண்டு, நிறைந்த, வண்டல், நாரை