நற்றிணை - 113. பாலை
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப் புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய் கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்- 'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே |
5 |
சேறும், மடந்தை!' என்றலின், தான் தன் நெய்தல் உண்கண் பைதல் கூர, பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து, உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் |
10 |
ஆம்பல்அம் குழலின் ஏங்கி, கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே! |
மடந்தாய்! எம்முள்ளம் அருமையாக ஈட்டப்படும் பொருளவாவினாலே பிணிக்கப்பட்டதை எண்ணியாஞ் செல்லுகின்றோம் என்றவுடன்; அவள் தான் தன்னுடைய நெய்தல் மலர் போலும் மையுண்ட கண்கள் வருத்தம் மிகப்பின்னுகின்ற (கரிய) கூந்தலை விரித்து அதனுள்ளே மறைந்து நின்று பெரிதும் கலக்கமடைந்து; உதியஞ் சேரல் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தையுடைய போர்க்களத்தின்கண்ணே; களம்பாடுநருடன் வாச்சியம் வாசிப்போர் விரைவாக ஊதுகின்ற ஆம்பல் என்னும் பண்ணையுடைய இனிய புல்லாங்குழல் இசையெடுத்தாற் போல; வாய்விட்டழுது கலங்கிய வருத்தமுறுகின்றவளினுடைய துன்பங்கொண்ட பார்வைகள் தாம்; மானினம் நிமிர்ந்து தழையுண்ணுதலினாலே சிறிது வளைந்த உயர்ந்த கிளைகளையும் புல்லிய அடியையுமுடைய இலந்தை மரங்களின் மேலே களியையுடைய பசிய காய்; பரல் பொருந்திய சிறிய நெறியின்கண் உதிர்ந்து நிறையப் பரவாநிற்கும்; பெரிய சுரத்தைக் கடந்தும் ஈங்கு எம்முன்னே அடைய வந்தன; இஃதென்ன வியப்பு !;
இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது. - இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 111 | 112 | 113 | 114 | 115 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நெய்தல், தான், பெருங், காய்