முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 97. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 97. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் வரையாமல் நெடுநாள் இருப்ப வருந்திய தலைவி, “எம்முடைய நட்பினை யாவரும் அறிந்தனர்: இன்னும் தலைவர் வரையும் முயற்சியை மேற்கொண் டாரல்லர்” என்று கூறியது.)
யானே ஈண்டை யேனே யென்னலனே ஆனா நோயொடு கான லதே துறைவன் தம்மூ ரானே மறையல ராகி மன்றத் ததே. |
|
- வெண்பூதியார். |
முடிபு: யான் ஈண்டையேன்; என் நலன் கானலஃது; துறைவன் தம்மூரான்; மறை மன்றத்தஃது.
கருத்து: என் நலனுண்ட தலைவர் இன்னும் வரைதற்குரிய முயற்சியைச் செய்தாரல்லர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 97. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, தலைவர், இன்னும், துறைவன், சங்க, எட்டுத்தொகை, தலைவன்