முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 93. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 93. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனுக்குத் தூதாக வந்து, “நீ சினவற்க; அவர் அன்புடையார்” என்ற தோழிக்கு, “அவர் நம்மால் உபசரித்து வழிபடற்குரியவரே யன்றி அளவளாவி மகிழ்தற்குரியரல்லர்” என்று தலைவி கூறியது.)
நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவிய தெவனோ அன்பிலங் கடையே. |
|
- அள்ளூர் நன்முல்லையார். |
முடிபு: தோழி, உரையல்; அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ? அன்பிலங்கடை, புலவி எவன்?
கருத்து: தலைவன் என்பால் மனைவியென்னும் கருத்துடன் அன்பு புரிந்தானல்லன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 93. மருதம் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், மருதம், தோழி, குறுந்தொகை, அல்லரோ, கூற்று, நமக்கு, அன்பு, தலைவன், அவர், எட்டுத்தொகை, சங்க, அன்னையும், அத்தனும்