முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 91. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 91. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையரிடம் சென்று மீண்டுவந்த தலைவன் தலைவியினது உடம்பாட்டை வேண்டி நின்றவிடத்து அவன்பால் ஊடலையுடைய வளாயினும் தன் நெஞ்சம் அவன்பாற் செல்வதையறிந்த தலைவி, “நீ அவன்பால் அன்புடையையாகி இருப்பின் பலநாள் துஞ்சாதுறையும் துன்பத்தையடைவாய்” என்று கூறியது.)
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம் தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற் பலவா குகநின் நெஞ்சிற் படரே ஓவா தீயு மாரி வண்கைக் |
5 |
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி கொன்முனை இரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே. |
|
- அவ்வையார். |
முடிபு: நெஞ்சே, ஊரன் பெண்டினையாயின், நின் நெஞ்சிற்படர் பலவாகுக; நீ துஞ்சும் நாள் சில ஆகுக!
கருத்து: தலைவன்பால் இரங்கி இப்பொழுது உடம்பட்டாலும் பின்னும் தன் ஒழுக்கத்தினின்றும் அவன் மாறுபடான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 91. மருதம் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், மருதம், கூற்று, ஆகுக, குறுந்தொகை, நெஞ்சே, நின், ஊரன், அவன்பால், எட்டுத்தொகை, சங்க, இருப்பின்